sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2,708 உதவி பேராசிரியர் பணிக்கு டிச., 20ல் தேர்வு

/

2,708 உதவி பேராசிரியர் பணிக்கு டிச., 20ல் தேர்வு

2,708 உதவி பேராசிரியர் பணிக்கு டிச., 20ல் தேர்வு

2,708 உதவி பேராசிரியர் பணிக்கு டிச., 20ல் தேர்வு


ADDED : அக் 17, 2025 07:53 PM

Google News

ADDED : அக் 17, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டிசம்பர், 20ல் தேர்வு நடத்த உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை, வாரியம் வெளியிட்டு இருந்தது. அது ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தகுதியானோர், அடுத்த மாதம் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்த இரண்டு நாட்கள் வரை, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம். ஏற்கனவே, தேர்வெழுத கட்டணம் செலுத்தியோர், தற்போது கட்டணமின்றி தேர்வெழுதலாம். எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்காணல் குறித்து அறிவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us