ADDED : ஜன 06, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டி.ஆர்.ஓ.,க்கள் எனப்படும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், 28 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். துணை கலெக்டர்கள், 30 பேருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், அரியலுார், மதுரை, துாத்துக்குடி, சேலம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் உட்பட, வெவ்வேறு மாவட்டங்களில், பல்வேறு பதவிகளில் இருந்த, 28 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதேபோல, ஆர்.டி.ஓ., உட்பட பல்வேறு பதவிகளில் இருந்த, துணை கலெக்டர்கள், 30 பேருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வுடன், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.