ADDED : ஜன 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி தி.மு.க., நகர் செயலாளராக நாராயணபாண்டியன் 48, உள்ளார். என்.ஆர்.டி., நகரில் ஒரு வீட்டின் முதல்மாடியில் நகர் தி.மு.க., கட்சி அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் கீழ்தளத்தில் உள்ள நுழைவு வாயில் கதவு, மேல்மாடியில் உள்ள 2 கதவுகள் உட்பட 3 கதவுகளை கம்பியால் உடைத்தனர்.
பின் அறையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 3 லேப்டாப்களை திருடிச் சென்றனர். இது குறித்து நகர் செயலாளர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை எஸ்.பி., சிவபிரசாத் பார்வையிட்டார். போலீசார் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

