sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மும்மொழி கல்வி கற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிமை இல்லையா? முதல்வருக்கு பரமக்குடி மாணவியர் கேள்வி

/

மும்மொழி கல்வி கற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிமை இல்லையா? முதல்வருக்கு பரமக்குடி மாணவியர் கேள்வி

மும்மொழி கல்வி கற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிமை இல்லையா? முதல்வருக்கு பரமக்குடி மாணவியர் கேள்வி

மும்மொழி கல்வி கற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிமை இல்லையா? முதல்வருக்கு பரமக்குடி மாணவியர் கேள்வி

102


UPDATED : பிப் 22, 2025 06:47 AM

ADDED : பிப் 20, 2025 04:12 PM

Google News

UPDATED : பிப் 22, 2025 06:47 AM ADDED : பிப் 20, 2025 04:12 PM

102


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, 'அரசு பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கல்வி கற்க உரிமை இல்லையா முதல்வரே? எங்களுக்கு மும்மொழி கற்க அனுமதி தாருங்கள்' என, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பள்ளி மாணவியர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த வீடியோ பரவி வருகிறது.

'மும்மொழி கல்வி கொள்கையில், ஹிந்தி கற்பது கட்டாயமில்லை. தங்கள் விருப்ப பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை மாணவர்கள் படிக்கலாம்' என, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு, மேலும் வலு சேர்க்கும் விதமாக பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர், பள்ளியில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில், 'தமிழக முதல்வரே... அரசு பள்ளி மாணவரான எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் மும்மொழி கற்க அனுமதி கொடுங்க' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- நமது நிருபர்-






      Dinamalar
      Follow us