sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 3 பேர் கைது

/

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 3 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 3 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 3 பேர் கைது


ADDED : செப் 30, 2024 05:23 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 3:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு, போதை மாத்திரைகளை விற்ற எம்.ஜி.ஆர்.நகர் செல்வராஜ் மகன் குணா, 23; சிங்கனுார் விநாயகமூர்த்தி மகன் ரீகன், 30; மரக்காணம் ரோடு ராஜா மகன் வல்லரசு, 24; ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இந்த வகை மாத்திரைகளை 1,000 ரூபாய்க்கு கூரியர் மூலம் வாங்கி 3,000 ரூபாய்க்கு போதை ஆசாமிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதையடுத்து 3 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய் தனர். அவர்களிடமிருந்து 8 அட்டைகள் கொண்ட 80 போதை மாத்திரைகள், சிரஞ்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us