sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு '3 ஆண்டு'

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு '3 ஆண்டு'

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு '3 ஆண்டு'

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு '3 ஆண்டு'


ADDED : ஜன 20, 2024 12:46 AM

Google News

ADDED : ஜன 20, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு. கூலி தொழிலாளியான இவர், 2016-ல், தன் நிலத்திற்கான கூட்டு பட்டாவை, தனி நபர் பட்டாவாக மாற்றக்கோரி விண்ணப்பம் செய்தார்.

அப்போது, கண்டிதம்பட்டு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றிய சங்கீதா, 43, என்பவர் அதற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரபாபு, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், வி.ஏ.ஓ., சங்கீதா லஞ்சம் வாங்கிய போது கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, லஞ்ச வழக்கில் கைதான வி.ஏ.ஓ., சங்கீதாவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us