sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு

/

பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு

பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு

பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு


ADDED : ஜூலை 23, 2025 11:35 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் 1வது வீதி வாடகை வீட்டில் வசித்து வருபவர் தியாகு (50). இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வருகிறார்.

மாதம் இருமுறை காரைக்குடிக்கு வருவது வாடிக்கை. அதற்காக குடும்பத்துடன் வந்தால் தங்குவதற்கு, வீடு வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து தியாகு போலீசாரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். தியாகு சென்னையிலிருந்து தற்போது காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வந்த பின்பு தான் வேறு ஏதேனும் பொருள்கள் திருடுபோய் உள்ளதா? என்று தெரியவரும். காரைக்குடி வடக்கு போலீசார் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us