sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உலக நன்மைக்கான 300 நாள் ரிக்வேத பாராயணம் நிறைவு

/

உலக நன்மைக்கான 300 நாள் ரிக்வேத பாராயணம் நிறைவு

உலக நன்மைக்கான 300 நாள் ரிக்வேத பாராயணம் நிறைவு

உலக நன்மைக்கான 300 நாள் ரிக்வேத பாராயணம் நிறைவு


ADDED : நவ 22, 2024 02:03 AM

Google News

ADDED : நவ 22, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு, காஞ்சி காமகோடி பீடம் வாயிலாக, 300 நாட்கள் நடத்தப்பட்ட ரிக்வேத பாராயணம் நிறைவு பெற்றது.

அதை அர்ப்பணிப்புடன் நிகழ்த்திய பாடசாலை மாணவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், 'விக்ருதிஜ்ஞ' விருது வழங்கி கவுரவித்தார்.

ரிக்வேத பாராயணம்


ராமஜென்ம பூமியான அயோத்தியில், பாலராமர் பிரதிஷ்டை கடந்த ஜனவரி, 22ல் நடந்தது.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், காஞ்சி காமகோடி பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கட்டளைப்படி, 'கோதண்டபாணிக்கு தண்ட சமர்ப்பணம்' என்ற பெயரில், உலக நன்மைக்காக ரிக்வேத பாராயணம் துவக்கப்பட்டது.

இந்த பாராயணம் காஞ்சி மடத்தின் வேத சாஸ்திர பாடசாலைகளில் ஒன்றான, திருவானைக்காவல், ஜகத்குரு வித்யாஸ்தானம் மற்றும் முத்தரசநல்லுார் தாலுகா பழூரில் அமைந்துள்ள ராமச்சந்திர அய்யர் நினைவு வேத வேதாந்த பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களின் வாயிலாக தொடரப்பட்டது.

ஜடை, மாலை, சிகை, ரேகை, துவஜம், தண்டம், ரதம், கணம் எனும் எட்டு ரிக்வேதத்தின் விக்ருதிகள் உள்ளன.

ஜடை மற்றும் கணம் பெரும்பாலும் பிரசாரத்தில் உள்ளன. மிகவும் கடினமான தண்டம் எனும் விக்ருதி. அது, தண்டக்கிரமம் என்றும் கூறப்படுகிறது.

ரூ. ஒரு லட்சம்


ரிக்வேதத்தினுடைய இந்த தண்டக்கிரம விக்ருதியின் சம்பூர்ண பாராயணம், ராமச்சந்திர அய்யர் நினைவு வேத வேதாந்த பாடசாலையில் துவக்கப்பட்டு தொடர்ந்து, 300 நாட்கள் பூர்த்தி செய்யப்பட்டது. தினமும் மாலை, 6:30 முதல் 8:00 மணி வரை இந்த பாராயணம் நடந்தது.

இந்த பாராயணம் வேதங்களின் ஆழமான ஆன்மிக சக்தியை உலகிற்கு எடுத்துரைக்க மட்டுமின்றி, அதன் வாயிலாக சமுதாய நன்மைக்கான பங்களிப்பை வலியுறுத்துகிறது.

தற்போது, கர்நாடக மாநிலம், சுல்லியா கிராமத்தில் உள்ள பரத்வாஜ ஆசிரமத்திற்கு, காஞ்சி மடாதிபதி விஜயம் செய்துள்ளார். அவர் தண்டக்கிரம வேத பாராயணத்தை அர்ப்பணிப்புடன் நிழ்த்திய மாணவர்களுக்கு, 'விக்ருதிஜ்ஞ' எனும் உயரிய பட்டத்தை வழங்கி பாராட்டினார்.

மேலும், மாணவர்களுக்கும், அவர்களது ஆசான்களான சுப்ரமண்ய, நீலகண்ட, மணிகண்ட கணபாடிகளுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.






      Dinamalar
      Follow us