sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லாரி கவிழ்ந்து இருவர் பலி 30,000 லிட்டர் பால் நாசம்

/

லாரி கவிழ்ந்து இருவர் பலி 30,000 லிட்டர் பால் நாசம்

லாரி கவிழ்ந்து இருவர் பலி 30,000 லிட்டர் பால் நாசம்

லாரி கவிழ்ந்து இருவர் பலி 30,000 லிட்டர் பால் நாசம்


ADDED : பிப் 08, 2025 12:59 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்,:ஓசூர் அருகே, பால் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட இருவர் பலியாகினர்.

கர்நாடகா மாநிலம், மைசூரில் நந்தினி என்ற பெயரில், அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் பால் பண்ணை உள்ளது.

அங்கிருந்து, 30,000 லிட்டர் பாலை ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மில்மா மில்க் எனப்படும், கேரள அரசுக்கு சொந்தமான, கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் பண்ணைக்கு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 32, லாரியை ஓட்டினார். அதே பகுதியைச் சேர்ந்த அருள், 27, கிளீனராக இருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள கரடிகுட்டை கிராமம் அருகே நேற்று காலை, 6:15 மணிக்கு லாரி சென்றபோது, டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், டேங்கரில் இருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30,000 லிட்டர் பால் முழுதும் சாலையில் கொட்டி வீணானது. ராஜேஷ்குமார், அருள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us