sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிராமப்புறங்களில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறி

/

கிராமப்புறங்களில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறி

கிராமப்புறங்களில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறி

கிராமப்புறங்களில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறி


ADDED : மே 31, 2025 04:29 AM

Google News

ADDED : மே 31, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஊரகப் பகுதிகளில், சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், 33,869 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும், 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' 2023 ஜூலை 10ம் தேதி ஊரகப் பகுதிகளில் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்தந்த கிராமத்திலேயே, சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கிராம சுகாதார செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் வாயிலாக, துணை சுகாதார நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுவரை 1.07 கோடி பேருக்கு பரிசோதனை செய்ததில், 33,869 பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளனர்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

கட்டட மற்றும் விவசாய வேலைகளில் பணியாற்றுவோருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பள்ளது. தமிழகத்தில் உள்ள 2 கோடி சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புஉள்ளது.

இதுவரை, 1.07 கோடி பேரிடம் நடத்திய பரிசோதனையில், 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இவர்கள் மேல் சிகிச்சைக்காக, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்ப நிலையிலேயே, சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுவதால், சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசோதனை விபரம்

மருத்துவமனைகள் - பரிசோதனை - அறிகுறிஆரம்ப சுகாதார நிலையங்கள் - 87.40 லட்சம் - 30,182துணை சுகாதார நிலையங்கள் - 19.08 லட்சம் - 3,687மொத்தம் - 1.07 கோடி - 33,869



பரிசோதனை விபரம்

மருத்துவமனைகள் - பரிசோதனை - அறிகுறிஆரம்ப சுகாதார நிலையங்கள் - 87.40 லட்சம் - 30,182துணை சுகாதார நிலையங்கள் - 19.08 லட்சம் - 3,687மொத்தம் - 1.07 கோடி - 33,869








      Dinamalar
      Follow us