"மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு": முதல்வர் ஸ்டாலின் பேச்சு
"மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு": முதல்வர் ஸ்டாலின் பேச்சு
UPDATED : மார் 11, 2024 11:24 AM
ADDED : மார் 11, 2024 11:23 AM

தர்மபுரி: 'மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்கிறோம்' என தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தில் ரூ.350.50 கோடியில் முடிவுற்ற 993 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தர்மபுரியில் ரூ.114 கோடி மதிப்பிலான 75 திட்டப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கான முத்தான விழா. தர்மபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். மகளிர் உரிமைத் திட்டத்தால் 1.15 கோடி மகளிர் பயன் பெறுகின்றனர்.பயனடைந்த பெண்கள் 'இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்' என்கின்றனர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றியுள்ளோம்.
சொல்லாததையும் செய்யும் ஆட்சி
அ.தி.மு.க.,வை சாடிய ஸ்டாலின்
திமுக அரசு போல மக்கள் நலத்திட்டங்களை அ.தி.முக,வால் பட்டியலிட முடியுமா?. வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். எந்த ஆட்சியில் நடந்தது என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள். தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கும் ஆட்சி திமுக. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
