sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,650 கோடி கடன்

/

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,650 கோடி கடன்

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,650 கோடி கடன்

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,650 கோடி கடன்


ADDED : அக் 05, 2024 12:56 AM

Google News

ADDED : அக் 05, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழில் நிறுவனங்களுக்கு

ரூ.3,650 கோடி கடன்

ஈரோடு, அக். 5-

ஈரோடு மாவட்ட அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் வசதியாக்கல் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:

மாவட்டத்தில், 85,000க்கும் மேற்பட்ட உத்யம் பதிவு பெற்ற குறு, சிறு, நடுத்தர உற்பத்தி சேவை, வியாபாரம் சார்ந்த நிறுவனங்கள் இயங்குகின்றன.

இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு இந்நிதியாண்டு இலக்காக, 9,521.34 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை அடைய அனைத்து வங்கிகளும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கடன் வசதியாக்கல் மற்றும் லோன் மேளா நடத்தி வருகிறது.

முதல் காலாண்டு முடிவில், 3,650 கோடி ரூபாய் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்நிதியாண்டின் இலக்கை அடைய அனைத்து வங்கிகளின் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பல்வேறு திட்டங்கள் மூலம், 28 நிறுவனங்களுக்கு, 69.93 கோடி ரூபாய் கடன் அனுமதி ஆணை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us