ADDED : டிச 28, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'ஆன்லைன்' பட்டா மாறுதல் சேவை, நான்கு நாட்கள் நிறுத்தப்படுவதாக, நில அளவை மற்றும் நிலவரித்துறை அறிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின், இணையவழி பட்டா மாறுதல் சேவை மேற்கொள்ளப்படும், 'தமிழ்நிலம்' மென்பொருளில், விவசாயிகள் விபர பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, இன்று காலை, 10:00 மணி முதல், 31ம் தேதி மாலை 4:00 மணி வரை, https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இணைய வழி சேவை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

