அரியலூரில் வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்பு
அரியலூரில் வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்பு
UPDATED : டிச 13, 2024 02:15 PM
ADDED : டிச 13, 2024 12:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலூர்: அரியலூர் மாவட்டம், மருதையாறு நடுவில் சிக்கிய 7 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாறு நடுவில், வெள்ளத்தில் 8 மாத குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் சென்றார்.
நீண்ட நேரம் போராடி, 7 பேரில் 4 பேரை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் மூன்று பேரை மீட்கும் பணிந்து வந்தது. பின்னர் அவர்கள் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.