ADDED : செப் 26, 2024 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே உடப்பன்குளத்தில் ஜாதி தகராறில் 2014ல் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 4 பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த செவ்வாய்க்கிழமை 11 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இன்று, குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

