சென்னை - பெங்களூரு உட்பட 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை - பெங்களூரு உட்பட 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : ஜன 09, 2025 12:50 AM

சென்னை: பொங்கலையொட்டி, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு உட்பட, நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மார்க்கம்/ நாள் / புறப்படும் - சேரும் நேரம்
பெங்களூரு - சென்னை/ 10.01.2025/ காலை 8:05 - மதியம் 2:40
சென்னை - பெங்களூரு/ ,, / மாலை 3:40 - இரவு 10:50
பெங்களூரு - துாத்துக்குடி/ ,, /இரவு 10:00 - மறுநாள் காலை 11:00
துாத்துக்குடி - மைசூரு/ 11.01.2025/ மதியம் 1:00 - மறுநாள் காலை 6:30
திருவனந்தபுரம் - சென்னை / 15.01.2025/ காலை 4:25 - இரவு 11:00
சென்னை - திருவனந்தபுரம்/ 16.01.2025 / காலை 1:00 - இரவு 8:00
எர்ணாகுளம் - சென்னை / 16.01.2025 / மாலை 6:15 - மறுநாள் காலை 8:30
சென்னை - எர்ணாகுளம்/ 17.01.2025 / காலை 10:30 - இரவு 11:00
--- வாரணாசி
மகாகும்ப மேளாவையொட்டி, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக வாரணாசிக்கு, சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து, பிப்., 5 அதிகாலை 1:00 மணிக்கு புறப்படும், பாரத் கவுரவ் சுற்றுலா ரயில், தென்காசி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், செங்கல்பட்டு, எழும்பூர் வழியாக வாரணாசி - பிரயாக் ராஜுக்கு இயக்கப்படுகிறது.
ஒன்பது நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு பெட்டிகளுக்கு ஏற்றார் போல், 26,850 ரூபாய் முதல் அதிகபட்சமாக 47,900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை அடங்கும். மேலும் தகவல் பெற, 9003140680, 8287932122 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

