sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் 4 பேர் படுகாயம்

/

பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் 4 பேர் படுகாயம்

பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் 4 பேர் படுகாயம்

பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் 4 பேர் படுகாயம்

6


ADDED : ஏப் 09, 2025 02:45 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 02:45 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி கூரை பெயர்ந்து விழுந்ததில், மாணவர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதி மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில், ஒரு வகுப்பறையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையும், மற்றொரு வகுப்பறையில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளும் இயங்கின.

நேற்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படித்து வந்த வகுப்பறை கட்டட கூரையில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் என, நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

நான்கு மாணவர்களும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us