sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி; ராமநத்தம் அருகே பரபரப்பு

/

49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி; ராமநத்தம் அருகே பரபரப்பு

49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி; ராமநத்தம் அருகே பரபரப்பு

49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி; ராமநத்தம் அருகே பரபரப்பு


ADDED : பிப் 18, 2025 06:18 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்; ராமநத்தம் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 49 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், கோட்டையூரை சேர்ந்தவர் குமார், 45. இவர், ஆண்டுதோறும் தனது ஆடுகளை வட மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து கிடை அமைத்து வருவாய் ஈட்டுவது வழக்கம்.

அதன்படி கடந்த சில நாட்களாக, கடலுார் மாவட்டம் ராமநத்தம் அடுத்த வாகையூரில் கிடை அமைத்து ஆடுகளை பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து விட்டு, 500 ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிடை அமைத்த இடத்திற்கு வந்து பார்த்த போது, பட்டியில் அடைத்து வைத்திருந்த 49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்து கிடந்தன.

இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கிடை கட்டுவது தொடர்பாக விரோதத்தில் ஆட்டுக்குட்டிகளுக்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us