sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரண்டு கிலோ தங்கத்துடன் நகை புரோக்கர் கடத்தல் 5 பேர் சிக்கினர்

/

இரண்டு கிலோ தங்கத்துடன் நகை புரோக்கர் கடத்தல் 5 பேர் சிக்கினர்

இரண்டு கிலோ தங்கத்துடன் நகை புரோக்கர் கடத்தல் 5 பேர் சிக்கினர்

இரண்டு கிலோ தங்கத்துடன் நகை புரோக்கர் கடத்தல் 5 பேர் சிக்கினர்


ADDED : டிச 02, 2024 05:27 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் நகை புரோக்கரை கடத்தி 2 கிலோ தங்கத்துடன் தப்பிய 5 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 60. நகை புரோக்கரான இவர், அடிக்கடி சென்னை சென்று நகைகளை வாங்கி மதுரை உள்ளிட்ட இடங்களில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து ரயில் மூலம் அதிகாலை 2 கிலோ தங்கத்துடன் மதுரை வந்த பாலசுப்பிரமணியை, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே 5 பேர் காரில் கடத்தினர். மேலுார் பகுதிக்கு அழைத்துச்சென்று மிரட்டி 2 கிலோ தங்கத்தை பறித்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து அவர் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். கார் பதிவெண் அடிப்படையில் விசாரணை துவங்கியது. முதற்கட்ட விசாரணையில் சென்னை நகை புரோக்கர் இதில் 'மூளையாக' செயல்பட்டது தெரிந்தது. போலீசில் சிக்கிய அவர் உட்பட கூட்டாளிகள் 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us