ADDED : மார் 18, 2025 04:41 AM

சென்னை : கேரளாவில் நடக்கும் ரயில் பாலம் பணி காரணமாக, ஐந்து விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை எழும்பூர் - குருவாயூர் காலை, 10:20 மணி விரைவு ரயில், வரும் 28ம் தேதி நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே இயக்கப்படும்
குருவாயூர் - எழும்பூர் ரயில், வரும் 29ம் தேதி இரவு 11:15 மணிக்கு பதிலாக, மறுநாள் காலை 5:15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து புறப்படும்
மங்களூரு சென்ட்ரல் - கன்னியாகுமரி காலை 5:00 மணி ரயில், வரும் 28ம் தேதி திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்
கன்னியாகுமரி - மங்களூரு அதிகாலை 3:45 மணி ரயில், வரும் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்
மதுரை - புனலுார் இரவு 11:20 மணி விரைவு ரயில், வரும் 28ம் தேதி, 30 நிமிடங்கள் தாமதமாக, இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.