ADDED : மார் 12, 2024 08:03 PM
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உதவி எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு, எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவர், திருப்பூர் தெற்கு பகுதி சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் உதவி எஸ்.பி., மதுகுமாரி, மதுரை தெற்கு சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகவும்; காரைக்குடி உதவி எஸ்.பி., ஸ்டாலின், கோவை வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
திருவள்ளூர் உதவி எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, திருச்சி நகரம் வடக்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகவும்; விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உதவி எஸ்.பி., கரத் கருண் உத்தவ் ராவ், மதுரை தெற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

