ADDED : டிச 03, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு, 5 கிலோ பாக்கெட்டில் இலவச அரிசி வழங்குகிறது.
இதற்காக, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு தலா 5 கிலோ எடையில், 75,000 பாக்கெட் அரிசி அனுப்பப்பட்டு உள்ளது.
திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு, 75,000 பாக்கெட்டுகள் அனுப்பும் பணி நடக்கிறது.