sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஒரே நாளில் காசாவில் 57 பேர் பலி

/

இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஒரே நாளில் காசாவில் 57 பேர் பலி

இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஒரே நாளில் காசாவில் 57 பேர் பலி

இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஒரே நாளில் காசாவில் 57 பேர் பலி

4


ADDED : ஏப் 08, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 04:46 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெய்ர் அல் - பலாஹ்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது. இந்த வான் வழி தாக்குதலில் ஒரே நாளில், 57 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 50,752 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1.15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது.

ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ளது.

முக்கிய நகரமான காசாவில் பள்ளிக்கூடம், அகதிகள் முகாம், மருத்துவமனை போன்ற இடங்களை தேர்வு செய்து வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

கான் யூனுசில் உள்ள மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடக கூடாரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

டெய்ர் அல் - பலாஹ் நகரில் உள்ள மருத்துவமனையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகதிகள் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

காசா நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுற்றதை அடுத்து, ஒரு மாதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக ஹமாஸ் நேற்று தாக்குதல் நடத்தியது.

இதில், பெரும்பாலான ட்ரோன்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.






      Dinamalar
      Follow us