ADDED : டிச 21, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மற்றும் திருநெல்வேலியில், ஐபோன் போலி உதிரிபாகங்கள் விற்ற, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரபலமான, 'பாலிகாப்' நிறுவனத்தின் மின் ஒயர்கள் மற்றும் ஐபோன் போலி உதிரிபாகங்களை, மர்ம நபர்கள், சென்னை மற்றும் திருநெல்வேலியில் விற்று வருவதாக, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்து உள்ளன.
அதன் அடிப்படை யில், ஐ.ஜி., செந்தில்குமாரி தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட நகரங்களில் சோதனை நடத்தி, ஆறு பேரை கைது செய்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து, 7.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்துள்ளனர். கைதான நபர்களின் கூட்டாளிகள் குறித்து துப்பு துலக்கி வருவதால், அவர்களின் விபரங்களை வெளியிட, போலீசார் மறுத்து விட்டனர்.

