sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

6 மினி ஜவுளி பூங்காக்கள்: தமிழக அரசு ஒப்புதல்

/

6 மினி ஜவுளி பூங்காக்கள்: தமிழக அரசு ஒப்புதல்

6 மினி ஜவுளி பூங்காக்கள்: தமிழக அரசு ஒப்புதல்

6 மினி ஜவுளி பூங்காக்கள்: தமிழக அரசு ஒப்புதல்


ADDED : ஜன 23, 2024 05:07 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் ஆறு சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு, திட்ட ஒப்புதல் அரசாணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் திருப்பதி மினி டெக்ஸ்டைல் பார்க்; தர்மபுரி பாரத் மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்; கரூர் வி.எம்.டி.,மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்; திருப்பூர் கார்த்திகேயா வீவிங் பார்க்; கரூர் ஸ்ரீ பிரனவ் மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்; கரூர் நாச்சி மனி டெக்ஸ்டைல் பார்க் ஆகியவை துவக்கப்பட உள்ளன.

இவற்றின் திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத் தொகை, 13.75 கோடி ரூபாய்.

முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்ட ஒப்புதல் அரசாணைகளை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதன் வழியே, 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு பூங்காவில் ஆண்டுக்கு, 24 லட்சம் மீட்டர், துணி வகைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக, 2.50 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான, முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 17 ஜவுளி நிறுவனங்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகை, 9.25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

நேற்று ஐந்து நிறுவனங்களுக்கு, 5.33 கோடி ரூபாய் மானியத் தொகைக்கான காசோலையை, முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நுால் துறை ஆணையர் வள்ளலார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us