கூட்டாளியை எரித்துக்கொன்ற வழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 6 பேர் ஆஜர்
கூட்டாளியை எரித்துக்கொன்ற வழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 6 பேர் ஆஜர்
ADDED : ஆக 25, 2025 11:43 PM
விருதுநகர்:
கூட்டாளியை எரித்துக் கொலை செய்த வழக்கில் மது ரை ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேரில் 6 பேர் நேற்று காலை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜராயினர்.
ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் 38, மாயமானதால் அவரது மனைவி முருகலட்சுமி 2021ல் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த விசாரணையில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் செந்தில்குமாரால் தானும் போலீசில் சிக்கிவிடக்கூடும் என கருதி ஒரு கும்பல் அவரை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டு துண்டுகளாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது.
இவ்வழக்கில் 2023 ஜூன் 21ல் வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்து சாத்துார் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அதன் பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு விசாரணைக்கு நேற்று வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், சதீஷ் குமார், சகாய டென்னிஸ் சரண்பாபு, பாலசுப்பிரமணியன், லோகேஷ் ஆகியோர் ஆஜராகினர். ஈஸ்வர் தேஜூ ஆஜராகவில்லை. அக். 17ல் இ வர்கள் மீண்டும் ஆஜராக நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார்.