sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

68 சமுதாய பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

/

68 சமுதாய பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

68 சமுதாய பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

68 சமுதாய பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு


ADDED : மார் 19, 2024 11:24 PM

Google News

ADDED : மார் 19, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சீர்மரபினரை சேர்ந்த, 68 சமுதாய மக்களின் பிரதிநிதிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு, 2019 முதல், மத்திய அரசு பயன்பாட்டிற்கு, சீர்மரபினர் பழங்குடிகள் என்றும், மாநில அரசு பயன்பாட்டிற்கு சீர்மரபினர் சமுதாயம் என்றும் இரண்டு வகையான ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இரட்டை சான்றிதழ் முறையை ரத்து செய்து, சீர்மரபினர் பழங்குடிகள் என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கும்படி, சீர்மரபினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அரசை வலியுறுத்தி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த 16ம் தேதி, சீர்மரபினர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, சீர்மரபினர் பழங்குடிகள் என ஒற்றை சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின்உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, சீர்மரபினர் நலச்சங்கத்தின் தலைவர் ஜெபமணி, தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி மற்றும் 68 சமுதாய மக்களின் பிரதிநிதிகள், நேற்று முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

தங்கள் கோரிக்கையை ஏற்று, சீர்மரபினர் பழங்குடிகள் என, ஒற்றை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதேநேரம் இன்னும் அரசாணை வெளியிடப்படாமல் இருப்பதை தெரிவித்தனர். அதற்கு முதல்வர் நான் உத்தரவு பிறப்பித்திருப்பதால்,அரசாணை வெளியிடப்படும் என்று உறுதிஅளித்தார்.






      Dinamalar
      Follow us