sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்திய கம்யூ., போட்டியிடும் 2 தொகுதிக்கு 7 பேர் பரிந்துரை

/

இந்திய கம்யூ., போட்டியிடும் 2 தொகுதிக்கு 7 பேர் பரிந்துரை

இந்திய கம்யூ., போட்டியிடும் 2 தொகுதிக்கு 7 பேர் பரிந்துரை

இந்திய கம்யூ., போட்டியிடும் 2 தொகுதிக்கு 7 பேர் பரிந்துரை


ADDED : மார் 18, 2024 12:45 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய இரு தொகுதிகளுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யும் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

மாநில செயலர் முத்தரசன் தலைமையில் நடந்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில், 31 பேர் பங்கேற்றனர்.

இதில், திருப்பூர் தொகுதிக்கு ஈரோடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாப்பா மோகன், ரவி, ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலர் பெரியசாமி, தற்போதைய எம்.பி., சுப்பராயன் ஆகியோரை மாவட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, நாகப்பட்டினம் தொகுதியில் தற்போதைய எம்.பி., செல்வராஜ், மாவட்ட செயலர் செல்வராஜ், லெனின், ராஜா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் சிட்டிங் எம்.பி.,க்கள். ஏழு பேர் புதுமுகங்கள்.

கட்சி விதிகளின்படி, இரண்டு முறைக்கு மேல் ஒரு நிர்வாகி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதாலும், 70 வயதுக்கு மேற்பட்டவர், மற்றவர்களுக்கு வழிவிட்டு, கட்சி பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்பதாலும், இரண்டு தொகுதிக்கும் புதுமுகங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அக்கட்சியின் நிர்வாககுழு கூட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதில் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.






      Dinamalar
      Follow us