sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., ஆட்சியில் 7 'சிப்காட்' பூங்கா; 4 ஆண்டுகளில் 30 தொழில் பூங்கா: ராஜா

/

அ.தி.மு.க., ஆட்சியில் 7 'சிப்காட்' பூங்கா; 4 ஆண்டுகளில் 30 தொழில் பூங்கா: ராஜா

அ.தி.மு.க., ஆட்சியில் 7 'சிப்காட்' பூங்கா; 4 ஆண்டுகளில் 30 தொழில் பூங்கா: ராஜா

அ.தி.மு.க., ஆட்சியில் 7 'சிப்காட்' பூங்கா; 4 ஆண்டுகளில் 30 தொழில் பூங்கா: ராஜா


ADDED : ஜூன் 24, 2025 06:15 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு ஆட்சியில், ஏழு, 'சிப்காட்' தொழில் பூங்காக்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. கடந்த நான்காண்டு ஆட்சியில், 30க்கும் மேற்பட்ட தொழில் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன' என, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

நம் நியாயமான முதலீடுகளை பிற மாநிலங்களுக்கு திசை திருப்புவதில், குறிப்பாக பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில், மத்திய அரசு மிக தீவிரமாக உள்ளது. அதற்காக தன் அதிகார பலத்தை பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கண்டன அறிக்கையை மத்திய அரசை நோக்கி வெளியிடுவதே சரியானதாக இருக்கும்.

அ.தி.மு.க.,வின், 2016 - 21 ஆட்சியில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு உறுதிமொழிகளை பெற்றதாக பழனிசாமி கூறுகிறார். தி.மு.க., ஆட்சியில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள், 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவரது கூற்றுப்படியே, 2 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டதை ஒப்புக்கொண்டாலும், எத்தனை சதவீதம் முதலீடாக மாறியது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

அவர், முதலீடாக மாற்றாமல் விட்டுச்சென்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், காழ்ப்புணர்வு காட்டாமல், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகளாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து, அரசு செயல்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு ஆட்சியில், ஏழு சிப்காட் தொழில் பூங்காக்களை மட்டுமே நிறுவினர். இந்த ஆட்சியில், 30க்கும் மேற்பட்ட தொழில் பூங்காக்களை நிறுவியுள்ளோம். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து, பழனிசாமி ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறாரா?

அவர், தொடர்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு, அரசியலில் கவனம் பெற நினைக்கலாம். ஆனால், தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று, நாட்டின் வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us