sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

8 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு

/

8 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு

8 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு

8 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு


ADDED : மார் 29, 2025 01:34 AM

Google News

ADDED : மார் 29, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தெலுங்கானா மாநிலம், காச்சிகுடா - மதுரை உட்பட எட்டு சிறப்பு ரயில்களின் சேவை, மே முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காச்சிகுடா - மதுரை இடையே திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்ரல் 7 முதல் மே 5 வரை நீட்டித்து இயக்கப்படும். மதுரை - காச்சிகுடா இடையே புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 9 முதல் மே 7 வரை நீட்டித்து இயக்கப்படும்

மஹாராஷ்டிரா மாநிலம், நான்தேட் - ஈரோடுக்கு வெள்ளி கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் ஏப்., 4 முதல் மே 2 வரையிலும், ஈரோடு - நான்தேட்டுக்கு ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 6 முதல் மே 4 வரை நீட்டிக்கப்படும்

காச்சிகுடா - நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்லும் சிறப்பு ரயில், ஏப்., 4 முதல் மே 2 வரையிலும், நாகர்கோவில் - காச்சிகுடாவுக்கு ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 6 முதல் மே 4 வரையிலும் நீட்டிக்கப்படும்

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் அருகில் உள்ள செர்லபல்லி - விழுப்புரம் இடையே வியாழன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 3 முதல் மே 1 வரையிலும், விழுப்புரம் - செர்லபல்லிக்கு வெள்ளி கிழமைகளில் செல்லும் ரயில், ஏப்., 4 முதல் மே 2 வரையிலும் நீட்டித்து இயக்கப்படும்.

இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us