sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.5 கிலோ தங்க கட்டிகள் உபயம்

/

பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.5 கிலோ தங்க கட்டிகள் உபயம்

பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.5 கிலோ தங்க கட்டிகள் உபயம்

பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.5 கிலோ தங்க கட்டிகள் உபயம்


ADDED : ஜன 04, 2025 05:36 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூலவர் விமானத்திற்கு செப்பு தகடு வேய்ந்து, தங்கரேக்குகளை பொருத்தும் பணிகளுக்கு, உபயதாரர்கள் எட்டரை கிலோ தங்கக்கட்டிகளை, சென்னை அறநிலையத்துறை தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினர்.

தங்க கட்டிகள் கோவில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், சேகர்பாபு அளித்த பேட்டி:

தமிழகம் முழுதும் பல கோவில்களில், 5,487 கோடி ரூபாயில், 21,908 திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், உபயதாரர்கள், 1,185 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 9,491 பணிகளை மேற்கொண்டுள்ளனர். கோவில்களுக்கு வரவேண்டிய வாடகை, குத்தகை நிலுவை தொகை, 937 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுஉள்ளது.

இந்தாண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பெருந்திட்ட வரைவின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை, 14 கோவில்களின், 473 கிலோ சுத்த தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

எட்டு கோவில்களுக்கு சொந்தமான, 776 கிலோ பொன் இனங்கள் மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், 1,000 கிலோ சுத்த தங்க கட்டிகளை வைப்பு நிதியாக முதலீடு செய்வோம்.

நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில், 19வது திவ்ய தேசம். இக்கோவிலில், 1.09 கோடி ரூபாயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிப்.,2ல் சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படும். இக்கோவில் மூலவர் விமானத்தை தங்க விமானமாக அமைத்திடும் வகையில், தங்க ரேக் ஒட்டும் பணிகளுக்கு, உபயதாரர் மருதப்ப செட்டியார் சார்பில், அவரது பேரன்கள் ஹரி, குகன் ஆகியோர், 6.32 கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டரை கிலோ தங்கக் கட்டிகளை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us