sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடுவானில் விமானத்தில் 'காக்பிட்'டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

/

நடுவானில் விமானத்தில் 'காக்பிட்'டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

நடுவானில் விமானத்தில் 'காக்பிட்'டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

நடுவானில் விமானத்தில் 'காக்பிட்'டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

14


ADDED : அக் 17, 2024 05:57 AM

Google News

ADDED : அக் 17, 2024 05:57 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு : ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு வந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், தன்னிடம் சொல்லாமல் கழிப்பறைக்கு சென்ற உதவி பைலட்டை காக்பிட்டுக்கு வெளியே நிற்க வைத்து, விமான கேப்டன் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் யு.எல்., 607 என்ற விமானம் சமீபத்தில் வந்தது. 10 மணி நேரம் பயண துாரம் உடைய இந்த விமானத்தை ஆண் கேப்டன் இயக்கினார். அவருடன் பெண் பைலட் உதவிக்கு இருந்தார்.

விமானத்தை இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி, 'காக்பிட்' எனப்படும் பைலட்டுகள் இருக்கும் அறையில் கேப்டன் உடன் எப்போதும் உதவி பைலட் அல்லது விமான ஊழியர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நிலையில், அந்த விமானத்தில் கேப்டனிடம் சொல்லாமல், விமான ஊழியர் யாரையும் ஏற்பாடு செய்யாமல், பெண் பைலட் கழிப்பறைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

திரும்பி வந்த போது, விமானத்தின் கேப்டன் காக்பிட்டை உள்பக்கமாக பூட்டி விட்டார். பெண் பைலட்டை காக்பிட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால், பெண் பைலட் வெளியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது கேப்டனுக்கும், பெண் பைலட்டுக்கும் இடையே வார்த்தை மோதலை உண்டாக்கியது. பின், விமானத்தில் இருந்த மூத்த ஊழியர், கேப்டனை அழைத்து பேசி சமாதானப்படுத்திய பின், அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரை கேப்டனுக்கு பணி வழங்கப்படாது என கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us