நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மாநில அளவில் கணக்கிட, ஒவ்வொரு ஆண்டும் திறனறி தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்வு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், 25 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை நடைபெற உள்ளது.
இதில், மூன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வு, மிகக்கடுமையான நெறிமுறைகளை பின்பற்றி கெடுபிடிகளுடன், இரண்டு மணி நேரம், தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும்.