sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு ஆலை சுவர் இடிந்து வழிபாட்டிற்கு வந்தவர் பலி

/

பட்டாசு ஆலை சுவர் இடிந்து வழிபாட்டிற்கு வந்தவர் பலி

பட்டாசு ஆலை சுவர் இடிந்து வழிபாட்டிற்கு வந்தவர் பலி

பட்டாசு ஆலை சுவர் இடிந்து வழிபாட்டிற்கு வந்தவர் பலி


ADDED : ஜன 08, 2024 05:36 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை சுவர் இடிந்து விழுந்து குல தெய்வ வழிபாட்டிற்கு வந்த சாத்துார் படந்தாலை சேர்ந்த சுந்தர் மூர்த்தி 41, பலியானார்.

சாத்துார் அருகே படந்தாலை சேர்ந்த சுந்தர் மூர்த்தி. தனது குடும்பத்துடன் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் உள்ள செந்தட்டி அய்யனார் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததில் கோயிலுக்கு செல்லும் ரோடு முழுவதும் தண்ணீர் ஓடியது. அருகில் உள்ள பட்டாசு ஆலையின் சுற்றுச்சுவரை ஒட்டி, நடந்து செல்கையில் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சுந்தர மூர்த்தி உயிரிழந்தார்.

உடன் நடந்து சென்ற அவரது சகோதரர் மாரீஸ்வரன் 28, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தண்ணீரில் விழுந்தார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us