பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்
பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்
ADDED : பிப் 18, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் சின்னக்கடை தெருவில், ஜோஷினி என்ற பியூட்டி பார்லர் செயல்படுகிறது. செங்கத்தை சேர்ந்த சுதா, 35, பணிபுரிகிறார்.
நேற்று மதியம், 12:00 மணியளவில் ஒரு கும்பல் பார்லருக்குள் புகுந்து, சுதாவின் முகம் மற்றும் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுதா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டவுன் போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.