sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மலை ரயிலை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு

/

மலை ரயிலை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு

மலை ரயிலை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு

மலை ரயிலை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு


ADDED : ஜூலை 07, 2025 03:23 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வந்த மலை ரயிலை, ஒற்றை யானை வழிமறித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிகளில், தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அதில், ஒற்றை யானை, மேட்டுப்பாளையம், குன்னுார் இடையே மரப்பாலம் - வடுக தோட்டம் மலை ரயில் பாதை பகுதியில் முகாமிட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7:10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், காலை 9:30 மணிக்கு வடுக தோட்டம் பகுதியில் வந்தபோது, யானை வழிமறித்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஹாரன் எழுப்பி, யானையை விரட்ட ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தனர். இதில், ரயிலை நோக்கி யானை ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் ஹாரன் சப்தம் எழுப்பியதை அடுத்து, யானை அங்கிருந்து, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால், ரயிலில் வந்த சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us