பைக் மீது கார் மோதி விபத்து மருத்துவ கல்லுாரி ஊழியர் பலி
பைக் மீது கார் மோதி விபத்து மருத்துவ கல்லுாரி ஊழியர் பலி
ADDED : அக் 15, 2024 06:12 AM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி ஊழியர் உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே துரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார், 47; அரசு மருத்துவக் கல்லுாரி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று வேலை முடிந்து, மாலை 6:00 மணியளவில், பைக்கில், சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக இளநாங்கூர் கிராமத்திற்கு சென்றார்.
ஊர் அருகே சாலையை கடந்தபோது, அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வேகமாக வந்த கார் மோதியது. இதில், சாந்தகுமார் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் காரில் வந்த 6 பேரும் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த சாந்தகுமார் சிதம்பரம் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரவு உயிரிழந்தார்.
காரில் வந்த காயமடைந்த 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.