ADDED : நவ 07, 2025 07:19 AM

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, யோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்; தி.மு.க., அரசின் அலட்சியத்தால் இறந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், தாராபுரம் அருகே இதேபோல், பாலம் கட்ட தோண்டப்பட்டிருந்த, 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி பலியாகினர். அவர்களின் மகளும் படுகாயம் அடைந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம், அதேபோல் நிகழ்ந்துள்ளது. இது, தி.மு.க., அரசின் தொடர் அலட்சியத்தையே காட்டுகிறது.
பாலம் கட்ட தோண்டும் இடத்தில், எச்சரிக்கை பலகை, தடுப்பு வைக்காமல் விட்டு சென்று, அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பது தான், 'நாடு போற்றும் நல்லாட்சி'யின் லட்சணமா? ஒன்று உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், மக்களை வதைக்கிறீர்கள். இல்லையெனில், கமிஷன் அடித்து, வேலைகளை முறையாக செய்யாமல், மக்களை வதைக்கிறீர்கள். மொத்தத்தில் இது பொற்கால ஆட்சியல்ல. கொலைகார ஆட்சி.
- நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,

