sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

/

திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு


ADDED : ஜன 20, 2025 04:39 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் அனாதையாக விடப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.

திண்டிவனம் காமராஜர் சிலை அருகே மாவு மில் படிக்கட்டில் நேற்று காலை 10:00 மணியளவில், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதன் அருகில் அந்த குழந்தையின் டிரஸ்கள் இருந்தது.

அவ்வழியே சென்றவர்கள், குழந்தையை ஆசுவாசப்படுத்த முயன்றனர். ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. வெகுநேரமாகியும், குழந்தையை தேடி யாரும் வராததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அனைத்து மகளிர் போலீசார், குழந்தையை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் யார், குழந்தையை அனாதையாக விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், எவ்வித தகவலும் கிடைக்காததை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, அதேகொம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர், குழந்தையை விழுப்புரத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்ட மேற்பார்வையாளர் புவனேஸ்வரியிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us