sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேட்டை கும்பலிடம் புதிய ரக துப்பாக்கி

/

வேட்டை கும்பலிடம் புதிய ரக துப்பாக்கி

வேட்டை கும்பலிடம் புதிய ரக துப்பாக்கி

வேட்டை கும்பலிடம் புதிய ரக துப்பாக்கி


ADDED : பிப் 19, 2024 04:11 AM

Google News

ADDED : பிப் 19, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், நக்சல் நடமாட்டம் மற்றும் வனவிலங்கு வேட்டைகாரர்கள் குறித்து, போலீசார் தொடர் விசாரணை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, நாடுகாணி பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக வந்த இருவரை, சோதனை சாவடியில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களிடம் துப்பாக்கி தோட்டா இருந்ததும், தேவாலா ஹட்டி பகுதி மணி, 53, சசிகுமார், 39, என்பதும் தெரியவந்தது.

விசாரணையில், 'தமிழக எல்லையை ஒட்டிய, கேரள மாநிலம் மருதா என்ற இடத்தில் இருந்து, 1.25 லட்சம் ரூபாய்க்கு புதிய ரக நாட்டு துப்பாக்கியை வாங்கியதும், அதை வைத்து, வனவிலங்குகளை வேட்டையாடியதும் தெரிந்தது.

மணி வீட்டில் மறைத்து வைத்திருந்த, புதிய ரக நாட்டு துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us