sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்

/

சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்

சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்

சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்

1


ADDED : ஜூன் 02, 2025 01:35 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:35 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும் பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தி.மு.க., அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். .

அவரது அறிக்கை; தமிழகம் முழுதும் பள்ளி, கல்லூரிகள் ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், சிறைத்துறை காவலர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்காகப் பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்ட நிலையில், தி.மு.க., அரசு திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி காவலர்களை இடமாற்றம் செய்துள்ளது சிறைத்தண்டனையை விடவும் மிகப்பெரிய கொடுந்தண்டனையாகும்.

பொதுக்கலந்தாய்வு ஏதுமில்லாத இவ்விடமாற்ற உத்தரவின் மூலம் தி.மு.க., அரசு காவலர்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையும் தண்டித்துள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். விரைவில் இரண்டாம்நிலை சிறைத்துறை காவலர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்ற தகவல் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுத்துறைகளில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி, அதனால் ஏற்படும் காலி இடங்களையும் கணக்கிட்டு, பொதுக்கலந்தாய்வு நடத்தி காவலர்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதன்பிறகு இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

ஆனால், இவற்றில் எதுவொன்றையும் பின்பற்றாமால் தி.மு.க., அரசு திடீரெனச் சிறைக்காவலர்களை 500 கிமீ தூரத்திற்கு இடமாற்றம் செய்து தண்டித்துள்ளது மட்டுமின்றி, பொதுக்கலந்தாய்வின் மூலம் தங்களது சொந்த மாவட்டம் அல்லது விருப்பமான இடங்களைக் கண்டறியும் வாய்ப்பையும் தட்டிப்பறித்துள்ளது மாபெரும் கொடுமையாகும்.

இடம் மாற்றம் செய்த பிறகு பதவி உயர்வு வழங்கினால் காவலர்கள் மீண்டும் இடம் மாறும் கட்டாயச்சூழல் ஏற்பட்டு, அது அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியையும், குடும்பத்தைப் பிரிகின்ற மனஉளைச்சலையும் ஏற்படுத்தும் என்பது தி.மு.க., அரசிற்குத் தெரியுமா? தெரியாதா? இதுதான் தி.மு.க., அரசின் நிர்வாகத்திறனா? பணிநேரம் முழுதும் கொடுங் குற்றவாளிகளுடன் சிறை வளாகத்திற்குள் இருக்க வேண்டிய சூழலுள்ள காவலர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருப்பது அவர்களது குடும்பத்துடன் செலவிடும் நேரம் மட்டுமேயாகும். அதையும் தி.மு.க., அரசு திட்டமிட்டுத் தட்டிப்பறிப்பது எவ்வகையில் நியாயமாகும்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

ஆகவே, தமிழ்நாடு அரசு தற்போதுதான் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படும் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைத்துறை முதல்நிலை காவலர்களுக்கான திடீர் பணியிடமாற்ற உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், சிறைத்துறை காவலர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை முதலில் வழங்கிய பிறகு, ஏற்படும் காலி இடங்களையும் கணக்கிட்டு, பொதுக்கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு முறையான இடமாறுதல் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us