sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

/

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி


ADDED : நவ 08, 2025 01:15 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'தி.மு.க., ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது,' என உடுமலையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு உதாரணமாக கோவையில் ஒரு பெண் கடத்தப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்தும், ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ேஷா நடத்த பல்வேறு கட் டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தி.மு.க., வினர்தான் தமிழகத்தில் ரோடு ேஷா நடத்தி வருகின்றனர். எனவே, தி.மு.க., வி.சி., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என தெரியவில்லை. வரும் தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு, தெரிவித்தார்.

முன்னதாக காட்டாற்று வெள்ளத்தால், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் பார்வையிட்டார். பா.ஜ., அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us