ADDED : ஜன 11, 2026 02:37 AM

நம் நாடு அசாத்தியமான நாடு. 2,000 ஆண்டுகளில், 1,800 ஆண்டுகள் நாம் பணக்கார நாடாக இருந்திருக்கிறோம். உலகில், 33 சதவீத பொருளாதார பங்களிப்பு நம்முடையதாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின், நம் நாட்டின் பொருளாதார வளம் திட்டமிட்டு சுரண்டப்பட்டது. இப்படியிருக்க மோடி ஆட்சிக்கு வந்தபின், முதன் முறையாக சமூக மூலதனம் அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில், பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் நடந்துள்ளது. பொருளாதாரத்தில், நாம் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதை, படித்தறிந்த பண்பாளர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் நான்காம் இடத்தில் இருக்கும் நாம், விரைவில் மூன்றாம் இடத்தை அடைவோம். அசாத்திய தொழில் முனையும் தன்மை நம்மிடம் உண்டு. காலனி சிந்தனைகளை தாண்டி, உத்வேகம் தரும் மாற்றங்களை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார். சுயசார்பு பொருளாதாரம் நம் நாட்டின் முன்னேற்றம்.
- கனகசபாபதி
துணை தலைவர், தமிழக பா.ஜ.,

