ADDED : டிச 12, 2024 06:29 PM

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.
வெளிநாடு போகணுமா...
திருவாரூர் அலிவலத்தில் பூரண புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் மன்னமுடையப்ப ஐயனார். இவரை வணங்கினால் வெளிநாடு செல்வதில் இருக்கும் தடை நீங்கும். சிவபெருமானின் அடியார் சேரமான் பெருமான். இவர் திருக்கயிலாயத்தில் இருந்தபோது பாடிய நுாலே திருக்கயிலாய ஞானஉலா. இதனை பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர் சாத்தன் (சிவகணம்). இவரையே நாம் சாத்தனார், ஐயனார், சாஸ்தா என்று வழிபடுகிறோம்.
இவருக்கு பல்லவர் காலத்தில் அதிகமான கோயில்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்றுதான் இத்தலம். தொடர்ந்து ஐந்து திங்கள் இவரை வழிபட்டால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சர்க்கரைப்பொங்கல், தயிர் சாதம் இவருக்கு பிடித்த நைவேத்யம்.
திருவாரூரில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: மதியம் 12:00 - 1:00 மணி
தொடர்புக்கு: 70109 04119
அருகிலுள்ள தலம்: பூமிநாத சுவாமி 1 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 11:00 மணி
தொடர்புக்கு: 99653 69168