ADDED : நவ 23, 2024 09:55 PM
'ஜார்க்கண்டில் இண்டி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஜார்க்கண்டில் அனைத்து தடைகளையும் கடந்து, வரலாற்று வெற்றியை பெற்றுள்ள அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும், இண்டி கூட்டணிக்கும் என் வாழ்த்துகள்.
அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளை, ஐந்து ஆண்டுகளாக பா.ஜ., உருவாக்கினாலும், அத்தனையையும் துணிச்சலுடனும், உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.
அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் அவரது தலைமையில் வைத்துள்ள நம்பிக்கையை, தேர்தல் முடிவுகளில் ஜார்க்கண்ட் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இது, மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

