sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியர் கோரிக்கை ஏற்பு 9 நாள் விட்டாச்சு லீவு

/

ஆசிரியர் கோரிக்கை ஏற்பு 9 நாள் விட்டாச்சு லீவு

ஆசிரியர் கோரிக்கை ஏற்பு 9 நாள் விட்டாச்சு லீவு

ஆசிரியர் கோரிக்கை ஏற்பு 9 நாள் விட்டாச்சு லீவு


ADDED : செப் 26, 2024 02:13 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை, அக்டோபர் 6 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது; 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், வரும் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து, அக்., 2 வரை ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்தாண்டுகளில் 10 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், 3, 4ம் தேதிகளில் அதாவது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விட்டால், அடுத்து வரும் சனி, ஞாயிறுகளையும் சேர்த்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மிகக் குறைந்த விடுமுறையில் விடைத்தாள்களை திருத்துவது சிரமம் எனவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

இதன்பின், பள்ளி கல்வித் துறை இயக்குனர் நேற்று முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'துறையின் கீழ் செயல்படும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 7ல் திறக்கப்படும்' என, அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us