sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீர் மின் உற்பத்தி குறைவு இலக்கை அடைவதில் சிக்கல்

/

நீர் மின் உற்பத்தி குறைவு இலக்கை அடைவதில் சிக்கல்

நீர் மின் உற்பத்தி குறைவு இலக்கை அடைவதில் சிக்கல்

நீர் மின் உற்பத்தி குறைவு இலக்கை அடைவதில் சிக்கல்


ADDED : பிப் 18, 2024 05:59 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போதிய மழை இல்லாததால், நீர் மின் உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 270 கோடி யூனிட்கள் குறைந்துள்ளது. எனவே, மத்திய மின்சார ஆணையத்தின் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன.

மழை சீசனில், நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள அணைகளில் தண்ணீர் தேக்கி, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப் படுகிறது.

தினமும் சராசரியாக, 80 லட்சம் - 1 கோடி யூனிட் வரையும்; தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் போது, 3 கோடி யூனிட் வரையும் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மத்திய மின்சார ஆணையம், நடப்பு நிதியாண்டில், நீர் மின் நிலையங்களில், 420 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய தென் மேற்கு பருவமழை சீசனில், போதிய அளவுக்கு மழை இல்லை.

இதனால், அணைகளுக்கு நீர் வரத்து மிகவும் குறைந்தது. இதன் விளைவாக, நீர் மின் உற்பத்தி தினமும் சராசரியாக, 1 கோடி யூனிட்டிற்கு கீழ் குறைந்தது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் இம்மாதம், 15ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக, 290 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 560 கோடி யூனிட்களாக அதிகம் இருந்தது.

அடுத்த மாதத்துடன் நிதியாண்டு முடிவடைகிறது. எனவே, இந்தாண்டில் மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், 420 கோடி யூனிட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மின் வாரியம், அதை விட அதிகமாக, 617 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்தது.






      Dinamalar
      Follow us