sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலி நகை கும்பல்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., உத்தரவு

/

போலி நகை கும்பல்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., உத்தரவு

போலி நகை கும்பல்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., உத்தரவு

போலி நகை கும்பல்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., உத்தரவு

6


ADDED : மார் 17, 2024 03:42 AM

Google News

ADDED : மார் 17, 2024 03:42 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'போலி நகை தயாரிப்பு கும்பல்கள் குறித்த புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

'அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன், மர்ம கும்பல்கள் போலி நகைகளை தயாரித்து வருகின்றன. இந்த கும்பல்களை சேர்ந்தோர், ஜுவல்லர்ஸ் மற்றும் அடகு கடைகளில் போலி நகைளை வைத்து மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அளவிலான பான் புரோக்கர் சங்கத்தினர், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், 'போலி நகை கும்பல்கள் குறித்து காவல் நிலையங்களில் தரப்படும் புகார்கள் மீது, உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த கும்பல்கள் குறித்து, உளவுத்துறை போலீசாரும் ரகசிய தகவல்களை சேகரிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் கூறுகையில்,'போலி நகை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அடகு கடைக்காரர்களுடன் கூட்டம் நடத்தி உள்ளோம். மர்ம கும்பல்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us