sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலாவதி குளூக்கோஸ் வழங்கிய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை 

/

காலாவதி குளூக்கோஸ் வழங்கிய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை 

காலாவதி குளூக்கோஸ் வழங்கிய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை 

காலாவதி குளூக்கோஸ் வழங்கிய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை 


ADDED : ஜூலை 26, 2025 07:43 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 07:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு காலாவதியான குளூக்கோஸ் வழங்கிய ஊழியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருப்பூர், சாமிநாதபுரத்தை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணி, மாநகராட்சி டி.எஸ்.கே., தாய், சேய் நல விடுதிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய சென்றார். பரிசோதனைக்கு பின், அவருக்கு அங்கிருந்த ஊழியர் குளூக்கோஸ் பாக்கெட் வழங்கினார்.

அது காலாவதியான பாக்கெட் என்பதால், கர்ப்பிணியின் கணவர் அது குறித்து கேட்டார். அங்கு உரிய பதில் இல்லை.

அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கேட்ட போதும், முறையாக பதில் அளிக்காமல் மெத்தனமாகவும், மரியாதை குறைவாகவும், ஊழியர்கள் பேசியுள்ளனர்.

மாநகர நல அலுவலர் முருகானந்த் மற்றும் டாக்டர் கலைச்செல்வன் ஆகியோர் விசாரித்தனர். இறுதியாக, லேப் டெக்னீஷியன் நாகஜோதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும், பொதுமக்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நர்ஸ் கோமதி மற்றும் பார்மசிஸ்ட் வீரபராசக்தி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us