sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மானிய உரத்துடன் பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை: வேளாண் இயக்குநர்

/

மானிய உரத்துடன் பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை: வேளாண் இயக்குநர்

மானிய உரத்துடன் பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை: வேளாண் இயக்குநர்

மானிய உரத்துடன் பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை: வேளாண் இயக்குநர்


ADDED : ஜூலை 24, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் போது, கட்டாயப்படுத்தி பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனை நிலையங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் உரத்துடன், இடு பொருட்கள் மற்றும் பிற ஆர்கானிக் உரங்கள், கரைசல்களை கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மானிய விலையில் வழங்கப்படும் உரங்களுடன், விவசாயிகளை கட்டாயப்படுத்தி பிற இடுபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உர உற்பத்தி நிறுவனம், இறக்குமதியாளர்கள், உர மொத்த விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர்களுக்கு, மத்திய அரசு, பிப்., மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு பின்னரும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உரங்களுடன், கட்டாயப்படுத்தி பிற பொருட்களை விற்பனை செய்வதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.

'இதுபோல செய்தால் அந்நிறுவனங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக வேளாண்மை இயக்குநர் முருகேஷ் எச்சரிக்கை செய்து, உர விற்பனை நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

-- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us